காதலிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் காதலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....
சிலர் பூ கொடுப்பார்கள்....
சிலர் பூந்தோட்டமே கொடுப்பார்கள்....
சிலர் கவிதையாகச் சொல்வார்கள்....
சிலர் பார்வைகளால் பரிமாறுவார்கள்....
ஷாஜகான் தன் காதலைச் சொன்னது கல்லறை கட்டி.....
அம்பிகாவதி தன் காதலைச் சொன்னது தனைக் கல்லறையாக்கி...
சீசர் தன் காதலைச் சொன்னது அவளுக்குப் பிடிக்கதவர்களை கல்லறைக்கனுப்பி....
இப்படி காதலும் காலத்திற்கேற்பவும்....காசுக்கேற்பவும் மாறுபடும்.....
ஷாஜகான் தாஜ்மகால் கட்டி தன் காதலை உலகத்துக்கே சொன்னான். அவன் காதல் வரலாறானது.
அவனை விட த்ங்கள் காதலிகளை அதிகமாக நேசித்த சாமனியர்கள் எங்கே போனார்கள்?சரி ஷாஜகான் தன் சொந்தக் காசில் கட்டியிருந்தால் கூட பரவாயில்லை. மன்னன் தொட்டதோமக்கள் வரியில்!
தாஜ்மகாலை ஒரு உலக அதிசயமாக்... மொகலாய கட்டிடச் சொத்தாக மட்டுமே என்னால் அங்கீகரிக்க முடியும்!
அதைக் கட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கலைஞர்கள் அந்த இருபது ஆண்டுகளில் தொலைத்த காதல்கள் எத்தனை?
பல காதல்களை பலியாக்கிய ஒரு கதல் சின்னம்... தாஜ்மகால்!
இது என் நிலைப்பாடு மட்டுமே!
நம் விடயத்துக்கு வருவோம்.....
அந்தக் காலக் கட்டத்தில் அதிகமாக சினிமாத்தனங்களுக்குள் அகப்பட்டவர்கலுல் அவனும் ஒருவன்..!
அவன் அந்த வயதிலேயே காதலை அழகாகச் சொன்னவன்! வஅவன் காதலித்ததைக் காதலித்தவர்கள் பல பேர்....
ஏழு மணி வகுப்பு என்றால் 6.30ற்கெல்லாம் ஆஜர். அவள் வரும்வரை காத்திருப்பு.... அதுவும் எந்த திசையில்
வந்தாலும் பார்வை படும்படியான இடத்தில்....! 6.45 மணிக்கெல்லாம் அவனுடன் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்துவிடக் க்
காத்திருப்பு கலகலப்பாகும். அவள் அசைவு தொலைவில் பட்டதுமே குரங்குத்தனமெல்லாம் குடியகல முனிவனின்
அமைதி வந்தமரும். இதழ்களில் ஒரு சிரிப்பு வேறு... சரியாக அவள் இவனைத் தாண்டும் போது, இவன் பெயரை அ....ஆ....
என்ற சுரங்களுடன் நண்பர்கள் உச்சரிக்க... அப்புறமென்ன அவன் ஹீரோ ஆக அவள் கதாநாயகியான புழுகலில் கண்கல் ஒருமுறை மோதிக் கொள்ளும்.. (பத்திகிச்சு..)
வகுப்பு ஆரம்பம் மணி 7.... அவள் எங்கு அமர்ந்திருப்பாலோ அதற்கு சரியாகப் பின்னால் ஆண்கள் இடத்தில் அமர்ன்ந்திருப்பான்! மணி 7.05... பாடம் ஆரம்பமாகும்!
வைத்த கண் வாங்காமல் மனது ஒன்றித்துப் படிப்பான்.. இடியே விழுந்தாலும் அசராமல் அப்படியொரு படிப்பு... கன்லகள் பார்ப்பதை கைகள் அப்படியே எழுதும்.. எழுதுவதெல்லாம் மனதில் உடனேயே பதிந்து போகும். மணி 8.25 படிப்பிகப்பட்டதில் கேள்வி கேட்கப்படும். பாய்ந்தடித்து முதலாவது ஆளாக தலையை ஒளித்துக் கொள்வான்...
பிறகென்ன பாடத்தைப் படித்தால் தானே பதில் சில்ல... அவளைப் படித்தால்.....?
பார்ப்பான்..... பார்த்துக் கொண்டேயிருப்பான் அவளை... அவள் கதுகளை... அவல் அலை பாயும் முடிகளை...
அசிந்தாடும் விழிகலை(கடை)... பேனையோடு விளையாடும் விரல்களை...! பார்பதையெல்லாம் கைகள் எழுதும் கவிதையாக... எழுதியதெல்லாம் மனதில் பதியும் காதலாக...
அவன் பார்வைகளை உள்வாங்கியபடியே அவள் உதடுகள் புன்னகைக்கும்.... ஆரம்பதிலெல்லாம் 'நற நற' என்று பல்லைக் கடித்தவல் தான் இப்போது புன்னகைகிறாள்... (முதல் படி முன்னேற்றம்)
மணி 9 வகுப்பு நிறைவு....! அடித்துப் பிடித்து அவசர அவசரமாக கீழிறங்கி நிற்பான், அவள் வரும் வரை! அவள் அவனைத் தாண்டும் போது அவனை விட அமைதியானவனைத் தேடவே முடியாது..! அரை நொடி பார்க்கும் விழிகள் சொல்லப் போவதை அறிவதற்கு அத்தனை ஆவல்...! அவள் மறைந்ததும் தான் தாமதம்.... அப்பாவி அடிமை எவனுடையதாவது சைக்கிள் பறிக்கப்படும். அப்புறமென்ன சுப்பிரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடல் தான்..!
சைக்கிளில் அவளுக்கு முன்னாலேயே போய் அவள் தெருவில் நின்று ஒரு புன்னகை! புரிந்தும் புரியாதது போல் போகும் அவள் நடை..! ஆரம்பத்தில் இப்படியிருக்க அவனைப் பிடித்துப் போனதும் வீட்டுக்குல் போய் பலகணியில் வந்து, இவன்
நிற்கிறானா போய்விட்டான எனப் பார்ப்பது வரைக்கும் வளர்ந்தது.
அப்பாவி அடிமைகள் சிக்காதவிடத்து.... கால்கள் தான்! ஓடிப்போய் வியர்த்து விறுவிறுத்து நிற்கும் வேளையிலும்
அதே ரொமான்ஸ் புன்னகை..! இந்த வேளைகளில் பாவப்பட்டோ என்னவோ பதில்ப் புன்னகை பெரிதாகக் கிடைக்கும்.
சிலர் பூ கொடுப்பார்கள்....
சிலர் பூந்தோட்டமே கொடுப்பார்கள்....
சிலர் கவிதையாகச் சொல்வார்கள்....
சிலர் பார்வைகளால் பரிமாறுவார்கள்....
ஷாஜகான் தன் காதலைச் சொன்னது கல்லறை கட்டி.....
அம்பிகாவதி தன் காதலைச் சொன்னது தனைக் கல்லறையாக்கி...
சீசர் தன் காதலைச் சொன்னது அவளுக்குப் பிடிக்கதவர்களை கல்லறைக்கனுப்பி....
இப்படி காதலும் காலத்திற்கேற்பவும்....காசுக்கேற்பவும் மாறுபடும்.....
ஷாஜகான் தாஜ்மகால் கட்டி தன் காதலை உலகத்துக்கே சொன்னான். அவன் காதல் வரலாறானது.
அவனை விட த்ங்கள் காதலிகளை அதிகமாக நேசித்த சாமனியர்கள் எங்கே போனார்கள்?சரி ஷாஜகான் தன் சொந்தக் காசில் கட்டியிருந்தால் கூட பரவாயில்லை. மன்னன் தொட்டதோமக்கள் வரியில்!
தாஜ்மகாலை ஒரு உலக அதிசயமாக்... மொகலாய கட்டிடச் சொத்தாக மட்டுமே என்னால் அங்கீகரிக்க முடியும்!
அதைக் கட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கலைஞர்கள் அந்த இருபது ஆண்டுகளில் தொலைத்த காதல்கள் எத்தனை?
பல காதல்களை பலியாக்கிய ஒரு கதல் சின்னம்... தாஜ்மகால்!
இது என் நிலைப்பாடு மட்டுமே!
நம் விடயத்துக்கு வருவோம்.....
அந்தக் காலக் கட்டத்தில் அதிகமாக சினிமாத்தனங்களுக்குள் அகப்பட்டவர்கலுல் அவனும் ஒருவன்..!
அவன் அந்த வயதிலேயே காதலை அழகாகச் சொன்னவன்! வஅவன் காதலித்ததைக் காதலித்தவர்கள் பல பேர்....
ஏழு மணி வகுப்பு என்றால் 6.30ற்கெல்லாம் ஆஜர். அவள் வரும்வரை காத்திருப்பு.... அதுவும் எந்த திசையில்
வந்தாலும் பார்வை படும்படியான இடத்தில்....! 6.45 மணிக்கெல்லாம் அவனுடன் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்துவிடக் க்
காத்திருப்பு கலகலப்பாகும். அவள் அசைவு தொலைவில் பட்டதுமே குரங்குத்தனமெல்லாம் குடியகல முனிவனின்
அமைதி வந்தமரும். இதழ்களில் ஒரு சிரிப்பு வேறு... சரியாக அவள் இவனைத் தாண்டும் போது, இவன் பெயரை அ....ஆ....
என்ற சுரங்களுடன் நண்பர்கள் உச்சரிக்க... அப்புறமென்ன அவன் ஹீரோ ஆக அவள் கதாநாயகியான புழுகலில் கண்கல் ஒருமுறை மோதிக் கொள்ளும்.. (பத்திகிச்சு..)
வகுப்பு ஆரம்பம் மணி 7.... அவள் எங்கு அமர்ந்திருப்பாலோ அதற்கு சரியாகப் பின்னால் ஆண்கள் இடத்தில் அமர்ன்ந்திருப்பான்! மணி 7.05... பாடம் ஆரம்பமாகும்!
வைத்த கண் வாங்காமல் மனது ஒன்றித்துப் படிப்பான்.. இடியே விழுந்தாலும் அசராமல் அப்படியொரு படிப்பு... கன்லகள் பார்ப்பதை கைகள் அப்படியே எழுதும்.. எழுதுவதெல்லாம் மனதில் உடனேயே பதிந்து போகும். மணி 8.25 படிப்பிகப்பட்டதில் கேள்வி கேட்கப்படும். பாய்ந்தடித்து முதலாவது ஆளாக தலையை ஒளித்துக் கொள்வான்...
பிறகென்ன பாடத்தைப் படித்தால் தானே பதில் சில்ல... அவளைப் படித்தால்.....?
பார்ப்பான்..... பார்த்துக் கொண்டேயிருப்பான் அவளை... அவள் கதுகளை... அவல் அலை பாயும் முடிகளை...
அசிந்தாடும் விழிகலை(கடை)... பேனையோடு விளையாடும் விரல்களை...! பார்பதையெல்லாம் கைகள் எழுதும் கவிதையாக... எழுதியதெல்லாம் மனதில் பதியும் காதலாக...
அவன் பார்வைகளை உள்வாங்கியபடியே அவள் உதடுகள் புன்னகைக்கும்.... ஆரம்பதிலெல்லாம் 'நற நற' என்று பல்லைக் கடித்தவல் தான் இப்போது புன்னகைகிறாள்... (முதல் படி முன்னேற்றம்)
மணி 9 வகுப்பு நிறைவு....! அடித்துப் பிடித்து அவசர அவசரமாக கீழிறங்கி நிற்பான், அவள் வரும் வரை! அவள் அவனைத் தாண்டும் போது அவனை விட அமைதியானவனைத் தேடவே முடியாது..! அரை நொடி பார்க்கும் விழிகள் சொல்லப் போவதை அறிவதற்கு அத்தனை ஆவல்...! அவள் மறைந்ததும் தான் தாமதம்.... அப்பாவி அடிமை எவனுடையதாவது சைக்கிள் பறிக்கப்படும். அப்புறமென்ன சுப்பிரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடல் தான்..!
சைக்கிளில் அவளுக்கு முன்னாலேயே போய் அவள் தெருவில் நின்று ஒரு புன்னகை! புரிந்தும் புரியாதது போல் போகும் அவள் நடை..! ஆரம்பத்தில் இப்படியிருக்க அவனைப் பிடித்துப் போனதும் வீட்டுக்குல் போய் பலகணியில் வந்து, இவன்
நிற்கிறானா போய்விட்டான எனப் பார்ப்பது வரைக்கும் வளர்ந்தது.
அப்பாவி அடிமைகள் சிக்காதவிடத்து.... கால்கள் தான்! ஓடிப்போய் வியர்த்து விறுவிறுத்து நிற்கும் வேளையிலும்
அதே ரொமான்ஸ் புன்னகை..! இந்த வேளைகளில் பாவப்பட்டோ என்னவோ பதில்ப் புன்னகை பெரிதாகக் கிடைக்கும்.


0 comments:
Post a Comment